மீன்பிடிக் கப்பலில் 300 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கடற்றொழிலாளர்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, மாலைதீவு பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் தகவல்
அத்தோடு, இந்த போதைப்பொருள் கையிருப்பு தேஹிபாலே மல்லி என்ற இலங்கை பாதாள உலக குற்றவாளிக்க சொந்தமானது என கண்டறிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை கடற்படை வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட குழு கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
