Home இலங்கை அரசியல் இன்று காலை ரணில் பக்கம் சாய்ந்தார் தமிழ் எம்.பி

இன்று காலை ரணில் பக்கம் சாய்ந்தார் தமிழ் எம்.பி

0

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் (Velu Kumar)2024 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு(Ranil Wickremesinghe) ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் இன்று (15) காலை கொழும்பு மலர் வீதியில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்ததாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara )தெரிவித்தார்.

வேட்பு மனுவை கையளிப்பதற்கு முன் நடந்த சந்திப்பு

நாணயக்காரவின் கூற்றுப்படி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கையளிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புறப்படுவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஜனாதிபதியை சிறிது நேரம் சந்தித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு

2015 பொதுத் தேர்தலில் தோட்டத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் மூலம் நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.

NO COMMENTS

Exit mobile version