Home முக்கியச் செய்திகள் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு ஆதரவு – சஜித் வழங்கிய வாக்குறுதி

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு ஆதரவு – சஜித் வழங்கிய வாக்குறுதி

0

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தேவைப்படும்போது ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும் என கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை சோசலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கதெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் இரவு தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ இறுதி முடிவை அறிவிக்கும் விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டை முன்னேற்றுவதற்கு ஆதரவு

மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய அநுரகுமார திசாநாயக்கவை நான் வாழ்த்துகிறேன்.

நாட்டைப் பலப்படுத்தவும் நெருக்கடியிலிருந்து மீட்பதற்கும் அவருக்கு பலம் இருப்பதாக நான் நம்புகிறேன்.

தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை முன்னேற்றுவதற்கு ஆதரவை வழங்குவது அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் கடமையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version