Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் சீருடையுடன் மனித எச்சம் கண்டுபிடிப்பு

கிளிநொச்சியில் சீருடையுடன் மனித எச்சம் கண்டுபிடிப்பு

0

Courtesy: Sivaa Mayuri

கிளிநொச்சி (Kilinochchi) பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த பல மனித எச்சங்களுடன் சீருடை ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் (26.04.2024) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்ணிவெடி அகற்றும் குழுவினர்  பளை பொலிஸாருக்கு முறையிட்டுள்ளதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெளிநாடொன்றில் டிக் டாக் பிரபலம் சுட்டுக்கொலை

பரிசோதனை

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி நீதவான் குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வுப் பணிகளை நாளைய தினம் (29.04.2024) மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் பணித்துள்ளார்.

உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறவும்: விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

தமிழர் பகுதியிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்திச்செல்லப்பட்ட குழந்தைகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version