Home இலங்கை அரசியல் அதிபர் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

அதிபர் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

0

இலங்கையில் (Sri Lanka) எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் கட்டாயம் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ரத்நாயக்க (Saman Sri Ratnayake) வலியுறுத்தியுள்ளார்.   

கிளிநொச்சியில் நடைபெற்ற பயிற்சி நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.   

கடந்த 2019 ஆம் ஆண்டை தொடர்ந்து, அரசியலமைப்புக்கமைய இலங்கையில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். 

தேர்தல்களுக்கு தயார்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ”இலங்கையில் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருக்கிறது. 

இதற்கமைய, இந்த ஆண்டு அதிபர் தேர்தலை நடத்துவதற்கான சட்ட இயலுமை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் அதிபர் தேர்தலை நடத்த முடியும்.

குறித்த காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்துவதற்கான திகதியொன்று நிர்ணயிக்கப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவால் விரைவில் அறிவிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version