Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிட வேண்டும்: பிரசன்ன ரணதுங்க முன்மொழிவு!

ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிட வேண்டும்: பிரசன்ன ரணதுங்க முன்மொழிவு!

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) போட்டியிட வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) முன்மொழிந்துள்ளார்.

கம்பஹா மாவட்டம் கடுவெல பகுதியில் இன்று (21) இடம்பெற்ற ‘ஏக்வா ஜெயகமு’ பேரணியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், அமைச்சரின் முன்மொழிவுக்கு பேரணியில் கலந்துக்கொண்ட அனைவரும் ஏகமனதாக கைகூப்பி ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகின்றது.

எவ்வாறெனினும், இதுவரையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கருத்து வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version