Home முக்கியச் செய்திகள் மருத்துவரிடம் தங்க நகை கொள்ளை:சிறிலங்கா இராணுவ சிப்பாய் கைது

மருத்துவரிடம் தங்க நகை கொள்ளை:சிறிலங்கா இராணுவ சிப்பாய் கைது

0

 சாரதி பயிற்சிக்காக சென்று கொண்டிருந்த ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் தங்க நகையை திருடிய இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டதாக வெலிஓயா காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தசம்பவம் இன்று(13) காலை வெலிஓயா (மணலாறு) பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வெலிஓயா, பராக்கிரமபுர பிரதேசத்தில் சாரதி  பயிற்சிக்கு செல்வதற்காக பாதையில் நின்றிருந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவரிடம் இருந்தே குறித்த சிப்பாய் , தங்க சங்கிலியை பறித்தெடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட காவல்துறை

இதனையடுத்து வெலிஓயா காவல்துறைக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில், நான்கு மோட்டார் சைக்கிள் குழுக்களை ஈடுபடுத்தி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேகநபரான இராணுவச்சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவரின் சங்கிலி மீட்பு

 அவரிடம் இருந்து ஆயுர்வேத மருத்துவரின் சங்கிலி மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிஓயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வெலி ஓயா பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் குறித்த சிப்பாய் பணி புரிபவர் என தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version