Home முக்கியச் செய்திகள் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் தீர்வு அவசியம் : யதார்த்தத்தை எடுத்துரைக்கும் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்

தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் தீர்வு அவசியம் : யதார்த்தத்தை எடுத்துரைக்கும் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்

0

தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய சுயநிர்ணய அடிப்படையான தீர்வு அவசியம் என ஐக்கிய சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணாமல் இலங்கையால் ஒரு அங்குலமேனும் முன்னோக்கி செல்ல முடியாது. பொருளாதாரப் பிரச்சனை மட்டும் அல்ல, இனப்பிரச்சினையும் பாரதூரமான பிரச்சினையாகும்.

தேர்தல்வேளை பேசப்படும் 13

தேர்தல் நெருங்கும்வேளையில்தான் 13 பற்றி பேசப்படுகின்றது. இது நகைச்சுவைத்தனமான செயற்பாடாகும்.தேசிய இனப்பிரச்சினைக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் போதுமான தீர்வாக அமையாது.

காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள்

மாகாணசபை முறைமை நடைமுறையில் உள்ளது. அதன்மூலம் பிரச்சினை தீர்ந்ததா. குறைந்தபட்சம் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களாவது பகிரப்பட்டதா இல்லை.

அவ்வாறு காவல்துறை, காணி அதிகாரங்களை வழங்கி இருந்தால்கூட ஓரளவு நம்பிக்கையை வென்றிருக்கலாம்.

ஜனாதிபதி வேட்பாளர்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வு எம்மிடம் மட்டுமே உள்ளது. நாம் சுயநிர்ணய உரிமையை ஏற்கின்றோம். 13 தீர்வாக அமையாது, 13 இற்கு அப்பால் சென்று தமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை தமிழர்களுக்கு வழங்கப்படும். ஸ்கொட்லாந்தில் போன்று இங்கு தீர்வு வழங்கப்படும்.” என்றார். 

NO COMMENTS

Exit mobile version