Home முக்கியச் செய்திகள் மருமகனின் தாக்குதலால் மாமனார் ஸ்தலத்தில் பலி!

மருமகனின் தாக்குதலால் மாமனார் ஸ்தலத்தில் பலி!

0

அம்பாறை (Ampara) மாவட்டம் சாய்ந்தமருது காவல்துறை பிரிவிற்குபட்ட பகுதியில் மருமகனின் தாக்குதலினால் மாமனார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாய்ந்தமருது – வொலிவேரியன் கிராமத்தில் இன்று (21) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை சந்தேக நபரான 32 வயதுடைய றிஸ்வி முகமட் அன்சார் என்பவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காவல்துறையினர் விசாரணை

தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த 62 வயதுடைய மீராசாயிப் சின்னராசா என்பவரின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த கல்முனை உதவி காவல்துறை அத்தியட்சகர் விசாரணைகளை மேற்கொண்டார்.

அத்துடன் அம்பாறையில் இருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இருவருக்கும் இடையில் முரண்பாடு

திருமணமான தனது மகளை விவாகரத்து செய்ய தயாரான மருமகனுடன் ஏற்பட்ட முரண்பாடே கொலையில் முடிவடைந்துள்ளதாக அடிப்படை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இவ்விடயத்தினால் அடிக்கடி மாமனாருக்கும் மருமகனுக்கும் ஏற்பட்டுவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குறித்த சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் சாய்ந்தமருது காவல் நிலையத்திலும் இரு வேறு குற்றச்சாட்டுகளுக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

NO COMMENTS

Exit mobile version