உலகெங்கும் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் நத்தார் பண்டிகையை இன்று கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் தேவாலயங்களில் விசேட பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சியில் நத்தார் வழிபாடு
அந்த வகையில் நத்தார் விசேட வழிபாடுகள் கிளிநொச்சியிலும் பல்வேறு திருச்சபைகளில் சிறப்பாக நடைபெற்றுள்ளன.
அதன்படி முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு அருட்பணி ஜோசுவா தலைமையில் நடைபெற்றது.
இந்த வழிபாடுகளில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
