திருகோணமலை சம்பவத்தையடுத்து கிழக்கு மாகாண மகா சங்கத்தினர் தீடிரென தன்னை சந்தித்து அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருகோணமலை ஸ்ரீ சம்போதி ஜயந்தி போதிராஜ விகாரையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அமரபுர மகா நிகாயாவின் கிழக்கு தாமன்கடுவ மற்றும் கிழக்கு தாமன்கடுவ பிரிவின் பிரதம சங்கநாயகம் அம்பிட்டியே சீலவன்சதிஸ்ஸ தேரர் ஆகியொர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சந்தித்து நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
கலந்துரையாடல்
கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உள்ளடங்கிய விபரங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளிப்படுத்தப்படவில்லை.
