Home இலங்கை அரசியல் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவின் போது கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் செல்லுபடியாகும் என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் 

ஆனால் ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்களிக்கும்போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தபால்மூல வாக்களிப்பின் போது கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதித்தமையினால் ஏற்பட்ட அசம்பாவிதங்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

you may like this


Source: https://tamilwin.com/article/special-notice-regarding-presidential-election-1726214931

NO COMMENTS

Exit mobile version