Home இலங்கை அரசியல் திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசேட நாடாளுமன்ற அமர்வு

திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசேட நாடாளுமன்ற அமர்வு

0

எதிர்வரும் திங்கட்கிழமை(30) விசேட நாடாளுமன்ற அமர்வொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் ஹரிணி அமரசூரிய, குறித்த நாடாளுமன்ற அமர்விற்கான அழைப்பை விடுத்துள்ளார்.

எனினும், அன்றைய தினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்த நிகழ்ச்சி நிரல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஜனாதிபதியின் விசேட உரை

அதேநேரம், குறித்த விசேட நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version