Home இலங்கை சமூகம் வன்னி தேர்தல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வோரை காணொளி எடுக்கும் புலனாய்வாளர்கள்!

வன்னி தேர்தல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வோரை காணொளி எடுக்கும் புலனாய்வாளர்கள்!

0

வன்னி ( Vanni) தேர்தல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வருவோரையும் அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறுவதையும் புலனாய்வாளர்கள் காணொளி எடுக்கும் சம்பவம் இடம்பெற்று வருகின்றது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதிக்கான வேட்புமனுக்கள் வவுனியா
மாவட்ட செயலகத்தில் தெரிவத்தாட்சி அதிகாரி அலுவலகத்தில் கையளிக்கும் நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.

இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வருவோரை அங்கு ஊடகவியலாளர்கள் போல்
நிற்கும் புலனாய்வாளர்கள் காணொளி மற்றும் புகைப்படம் எடுக்கின்றனர்.

காணொளி  எடுக்கும் புலனாய்வாளர்கள்

மேலும், ஊடகவியலாளர்கள் வேட்பாளர்களிடம் கருத்துக்களை கேட்கும் போது ஊடகவியலாளர்களுடன்
இணைந்து நின்று காணொளி எடுத்தும் வருகின்றனர்.

இதேவேளை, தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில், வேட்புமனுத்தாக்கல் ஆரம்பித்துள்ளது.

மேலும் தங்களது கட்சிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது போன்ற கலந்துரையாடல்களும் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி தேர்தல் தொகுதிக்கான வேட்பாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் துளசி ஆகியோர் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/spy-agents-record-candidates-in-vanni-1728550238

NO COMMENTS

Exit mobile version