Home இலங்கை அரசியல் தீர்க்கமான முடிவின் பின்னரே ஆதரவை வெளிப்படுத்துவோம் : சுமந்திரன் வெளியிட்டுள்ள நிலைப்பாடு

தீர்க்கமான முடிவின் பின்னரே ஆதரவை வெளிப்படுத்துவோம் : சுமந்திரன் வெளியிட்டுள்ள நிலைப்பாடு

0

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் (M. A. Sumandran) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும் என கூற முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை திருகோணமலையில் (Trincomalee) நேற்று (24) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனனை (Shanmugam Gugadasan) வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சு வார்த்தை

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பலர் என்னிடம் வினவும் ஒரு வினாவாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கப்போகிறீர்கள் என்று கேட்கின்றனர்.

பலமான பல அழுத்தங்களை கொண்டதும் மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் சமதூரத்தில் வைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்.

தீர்க்கமான முடிவின் பின் யாருக்கு ஏன் ஆதரவளிப்போம் என கூறிய போது அதற்கான காரணங்களையும் முன்வைப்போம்.

மக்களுடைய வாக்குகள் 

அதன் பின் நீங்களும் பூரண ஆதரவை அளிக்கலாம்.

மூன்று வேட்பாளர்களுக்கும் நன்கு தெரியும் எமது மக்களுடைய வாக்குகள் தேவை என்று இதனால் பேரம் பேசும் சக்தியாக அழுத்தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம் என்பதை மத்திய செயற்குழுவிற்கு அறிவித்துள்ளேன்.

எம்மை பற்றிய நிலவரங்களை சிங்கள மக்களுக்கு அவர்களாகவே புரியக்கூடிய வகையில் அறிவிக்க கூடிய நிலையில் இருக்க வேண்டும் என்பதை தெரிவிக்கிறேன்.

அதன் பின் கட்சி முடிவெடுக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்” என் அவர் தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/sri-lanka-2024-election-updates-1724569039

NO COMMENTS

Exit mobile version