Home முக்கியச் செய்திகள் மதுபான உற்பத்தியாளர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்

மதுபான உற்பத்தியாளர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்

0

மதுபான உற்பத்தியாளர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த நவம்பர் 30ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்படும் என கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.

சட்ட நடவடிக்கை

2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான கலால் வரியைச் செலுத்தத் தவறிய மது உற்பத்தியாளர்களுக்கு இன்று(02) காலை கலால் திணைக்களத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு வரி செலுத்துவதற்கு 02 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கலால் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version