Home இலங்கை அரசியல் வரிச்சுமையில் இருந்து நாட்டு மக்களுக்கு விடுதலை : நாமலின் திட்டம்

வரிச்சுமையில் இருந்து நாட்டு மக்களுக்கு விடுதலை : நாமலின் திட்டம்

0

வரம்பற்ற வரிச்சுமையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகள் மீண்டும் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும்  என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல்

கெக்கிராவ பிரதேசத்தில் தனது கட்சி உறுப்பினர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச நேற்று (16) பிற்பகல் கெக்கிராவ பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.

அங்கு நாமல் ராஜபக்சவுக்கு கெக்கிராவ பிரதேச பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடமிருந்து  வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதேவேளை, மாத்தளை ஸ்ரீ முத்து மாரியம்மன் தேவஸ்தானத்திற்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/sri-lanka-presidential-election-2024-1723881540

NO COMMENTS

Exit mobile version