Home இலங்கை அரசியல் சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் மாத்திரம் ஜனாதிபதியாக மாறியுள்ள சஜித்

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் மாத்திரம் ஜனாதிபதியாக மாறியுள்ள சஜித்

0

தனியார் சிங்கள தொலைக்காட்சி ஒன்றில மாத்திரம் மாத்திரம் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகியுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.

ரணிலை ஆதரித்து  நேற்று கேகாலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ரணிலின் வெற்றி 

மேலும், அநுர முகநூலில் மாத்திரமே ஜனாதிபதியாகியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற வைப்பதற்காக பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி, ஐ.தேக, இ.தோ.க என அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.  

இந்தநிலையில், குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் உதயகாந்த குணதிலக,

கடந்த 2 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமையை கேகாலை மக்கள் மறக்கவில்லை. கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து ஜனாதிபதியை மீளத் தெரிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version