Home முக்கியச் செய்திகள் யாழில் சஜித்தின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மக்களுக்கு நேர்ந்துள்ள கதி

யாழில் சஜித்தின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மக்களுக்கு நேர்ந்துள்ள கதி

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கலந்துக்கொள்ளவிருந்த கூட்டத்தில் அவர் கலந்துக் கொள்ள தாமதமாகியமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

குறித்த தேர்தல் பரப்புரை கூட்டமானது, இன்றையதினம் யாழ்ப்பாணம் – மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அசௌகரியத்தில் மக்கள்

இந்த கூட்டமானது ஒரு மணியளவில் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் இருந்து இரண்டு மணி அளவிலேயே சஜித் யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பந்தல் அமைக்கப்பட்டு இருந்தாலும் வெயில் வெக்கை காரணமாக மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவு வசதிகள்

மதியம் பிரதான உணவு வேளையிலேயே கூட்டமானது, ஏற்பாடு செய்யப்பட்டதால் மக்கள் காலை 11.00 மணிக்கே பேருந்துகளில் ஏற்றி வரப்பட்டனர், இவ்வாறு அழைத்து வரப்பட்ட மக்களுக்கு உணவு வசதிகள் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

சுமார் 4000 பொதுமக்கள் இந்த பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு இன்னல்களை அனுபவித்துள்ளதாக மேலும் குறிப்பிடப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version