Home இலங்கை இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்

0

இலங்கையில் (Sri Lanka) கைது செய்யப்பட்ட 20 இந்திய கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கடற்றொழிலாளர்கள் அனைவரும் இன்றைய தினம் (01) விடுவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகரகம்

அந்தவகையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியன இணைந்து இலங்கை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவர்களை விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த 20 இந்திய கடற்றொழிலாளர்களையும் நாளைய (02) தினம் இந்தியாவுக்கு (India) அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version