இலங்கையின் பொருளாதார மீட்சி வேகம் பெற்று வருவதாக சர்வதேச நாணய நிதியம்
தெரிவித்துள்ளது.
அத்துடன், இலங்கையில் சீர்திருத்தங்கள் பலனளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின்
தகவல் தொடர்புத் துறையின் இயக்குநர் ஜூலி கோசாக் குறிப்பிட்டுள்ளார்.
பணவீக்கம்
இலங்கையில் பணவீக்கம் குறைவாகவே உள்ளது. நிதிப் பக்கத்தில் வருமான வசூல்
மேம்பட்டு வருகிறது,
மேலும் சர்வதேச இருப்புக்கள் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றன.
2024 ஆம் ஆண்டில்
பொருளாதார வளர்ச்சி 5வீதத்தை எட்டியது,
இந்தநிலையில், இரண்டு வருட பொருளாதார சுருக்கத்திற்குப் பின்னர், 2025 ஆம்
ஆண்டிலும் இலங்கையில் மீட்சி தொடரும் என்று தாங்கள்; எதிர்பார்ப்பதாக ஜூலி
கோசாக் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும் இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் மிகவும் சாதகமான
முன்னேற்றங்கள் என்று வோசிங்டனில்; நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது
அவர்; கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
எனினும், இலங்கையின் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளது
என்றும், எனவே பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மை நீடித்து
நிலைத்திருப்பதை உறுதிசெய்ய சீர்திருத்த உந்துதல் நிலைத்திருப்பது மிகவும்
முக்கியம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதியம்
இலங்கைக்கு 334 மில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மையில் வழங்கியுள்ளது.
என்று
குறிப்பிட்ட அவர், இதனடிப்படையில் இலங்கைக்கு மொத்த நிதி உதவியாக 1.34
பில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ளது என்றும்
தெரிவித்துள்ளார்.
