Home இலங்கை அரசியல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

0

எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட் கிழமை பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பம்..

அரச  மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் இவ்வாறு மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.

 இரண்டாம் பாடசாலை தவணை கடந்த வெள்ளிக்கிழமை 16 ஆம் திகதி முடிவடைந்ததுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

 

Source: https://tamilwin.com/article/sri-lanka-schools-reopen-1724493287

NO COMMENTS

Exit mobile version