Home இலங்கை இஸ்ரேல் – ஈரானிடம் சிறிலங்கா விடுத்துள்ள வேண்டுகோள்!

இஸ்ரேல் – ஈரானிடம் சிறிலங்கா விடுத்துள்ள வேண்டுகோள்!

0

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் நிலவும் பதற்றமான சூழ்நிலையைத் தணிக்க ராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து இலங்கை உன்னிப்பாகக் கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோதல் சூழ்நிலை

இரு நாடுகளும் தங்கள் விவகாரங்களை அமைதியாக நடத்தவும், கலந்துரையாடல்களில் ஈடுபடவும், மோதல் சூழ்நிலையைத் தணிக்க இராஜதந்திர முயற்சிகளைத் தொடரவும் இலங்கை வலியுறுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் உள்ள இலங்கைத் தூதரகங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன, மேலும் இரு நாடுகளிலும் வாழும் இலங்கையர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. 

 

NO COMMENTS

Exit mobile version