Home இந்தியா தமிழக சிறைச்சாலையிலிருந்து இலங்கை கைதி தப்பியோட்டம்

தமிழக சிறைச்சாலையிலிருந்து இலங்கை கைதி தப்பியோட்டம்

0

தமிழகத்தின் (Tamil Nadu) திருச்சி (Trichy) சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் தப்பிச் சென்ற நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, குறித்த சிறைச்சாலையில் நேற்றைய தினம் (08) விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அங்குத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதான இலங்கையர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கையடக்க தொலைபேசி

குறித்த சோதனை நடவடிக்கையின் போது, சில கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை (Sri Lanka), பங்களாதேஷ் (Bangladesh), நைஜீரியா (Nigeria) உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சிலரும் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version