Home இலங்கை புடின் கையால் உயரிய விருதொன்றை பெற்ற முதல் இலங்கையர்

புடின் கையால் உயரிய விருதொன்றை பெற்ற முதல் இலங்கையர்

0

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று (04) கலாநிதி சமன் ரஞ்சித் வீரசிங்கவிற்கு நட்புறவுக்கான ரஷ்ய அரச விருதை வழங்கி வைத்துள்ளார்.

இது ரஷ்யாவால் ஒரு குடிமகனுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமாகும், மேலும் இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இராஜதந்திர, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய பல தசாப்த கால சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் இந்த விருதைப் பெற்ற ஒரே ஆசியர் சமன் வீரசிங்க என தெரிவிக்கப்படுகிறது

அத்தோடு, குறித்த விருதானது, இலங்கையின் உலகளாவிய இராஜதந்திர இருப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்யாவுடனான பரஸ்பர நட்பு

மொஸ்கோ மருத்துவப் பள்ளியில் கௌரவப் பட்டம் பெற்ற வீரசிங்க, ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதராக (2015 – 2018) பணியாற்றியுள்ளார்.

இதேவேளை, தற்போது இலங்கை-ரஷ்ய நட்புறவு சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் கொழும்பில் உள்ள ரஷ்ய புவியியல் சங்கத்தின் தலைவர் பதவிகளையும் அவர் வகிப்பதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, அவரது தலைமை, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார பரிமாற்றம், ஒத்துழைப்பு மற்றும் நீடித்த பரஸ்பர நட்பை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.

Source: https://ibctamil.com/article/sri-lankan-receives-top-award-from-putin-1762328306

NO COMMENTS

Exit mobile version