திருச்சி முகாமில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இலங்கை தமிழர் நவநாதனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காரணமற்ற கைது
இது குறித்த அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்துக்கு அகதியாக வந்த இலங்கை தமிழர் நவநாதனை எந்த காரணமும் கூறாமல் காவல்துறையினர் கைது செய்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்துள்ளனர்.
இதற்கு எதிராக திருச்சி சிறப்பு முகாமில் அவர் கடந்த 8 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதனால் அவரது உடல்நிலை சீர்கேடு அடைந்துள்ளது.
இந்த பிரச்சினையில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு நவநாதனை உடனடியாக விடுவித்து மருத்துவமனையில் அனுமதிக்க முன்வருமாறு வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
