Home இலங்கை குற்றம் டுபாயில் இருந்து இந்தியா ஊடாக இலங்கைக்கு வந்த நபர் கைது

டுபாயில் இருந்து இந்தியா ஊடாக இலங்கைக்கு வந்த நபர் கைது

0

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கத்தூளுடன் ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (13) கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

சந்தேகநபர் கைது

டுபாயில் இருந்து இந்தியா ஊடாக இலங்கைக்கு வந்த சந்தேகநபர் வசம் இருந்த 1 கிலோ 860 கிராம் தங்கத்தூளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 37 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

 

NO COMMENTS

Exit mobile version