Home இலங்கை அரசியல் காலிமுகத்திடலில் குவிக்கப்பட்டுள்ள சொகுசு வாகனங்கள்: கடும் தொனியில் சாடிய முன்னாள் எம்.பி

காலிமுகத்திடலில் குவிக்கப்பட்டுள்ள சொகுசு வாகனங்கள்: கடும் தொனியில் சாடிய முன்னாள் எம்.பி

0

காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களின் வாகனங்களை வைத்து மக்களை ஏமாற்றாமல் அந்த வாகனங்களை ஏலம் விட்டு திறைசேரிக்கு பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) கடும் தொனியில் சாடியுள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவரால் காலிமுகத்திடலில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “வாகனங்களை காட்டுவதன் மூலம் அவர்கள் ஒரு சிறிய மகிழ்ச்சியைப் பெறுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

அரச அதிகாரிகள் 

2015ம் ஆண்டு ஜோன் அமரதுங்க காலிமுகத்திடலில் கார் ஷோ நடத்தியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வாகனங்களை அமைச்சர்கள், எம்.பி.க்கள் பயன்படுத்தவில்லை.

  

இந்த வாகனங்களை பொதுப்பணித்துறையினர் மற்றும் அரச அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

குறித்த வாகனங்களை ஏலமிட்டு பணத்தை திறைசேரிக்கு எடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், இந்த வாகனங்களை ஏலமிட்டு அரச அதிகாரிகளுக்கு முச்சக்கர வண்டிகளை வழங்குமாறும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/-C0fn4NXoic

NO COMMENTS

Exit mobile version