Home இலங்கை சமூகம் மியன்மாரில் மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்கள்: தாய் நாட்டை வந்தடைந்ததாக தகவல்

மியன்மாரில் மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்கள்: தாய் நாட்டை வந்தடைந்ததாக தகவல்

0

மியன்மாரின் மியாவாடி இணையக் குற்றப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்களும் நாட்டை வந்தடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாய்லாந்தில் இருந்து இன்று (18) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த UL 403 என்ற விமானத்தில் அவர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆறு ஆண்களும் மற்றும் இரண்டு பெண்களும் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்களைப் பிற்போடும் முயற்சிக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

பாதுகாப்பு நிலைமை 

கடந்த மார்ச் நான்காம் திகதி மியன்மாரின் மியாவாடி இணையக் குற்றப் பகுதியில் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு இலங்கையர்களை விடுவிப்பதற்காக மியன்மார் பாதுகாப்புப் படையினர் செயற்பட்டனர்.

இவர்களை இலங்கைக்கு அனுப்பும் நோக்கில் மியாவாடி மத்திய காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 11ஆம் திகதி மியான்மாரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் அவர்களை தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.

இதனடிப்படையில் தாய்லாந்திற்கு அனுப்பப்பட்ட எட்டு இலங்கையர்களும் இன்று இலங்கை வந்துள்ளதாகவும் மற்றும் அவர்களின் வாக்குமூலங்களை பாதுகாப்பு தரப்பினர் பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை!

இலங்கையில் ஏமாற்றப்படும் சுற்றுலாப்பயணிகள்! பொங்கி எழுந்தார் டயானா கமகே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version