Home இலங்கை இலங்கையில் கடவுச்சீட்டுக்களின் கையிருப்பு குறித்து வெளியான தகவல்

இலங்கையில் கடவுச்சீட்டுக்களின் கையிருப்பு குறித்து வெளியான தகவல்

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையில்; புதிய கடவுச்சீட்டுகளின் கையிருப்பு கடந்த வெள்ளிக்கிழமைக்குள் 14,837 ஆகக் குறைந்துள்ளது.

இந்தநிலையில் அவநம்பிக்கையான விண்ணப்பதாரர்கள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு வெளியே பல நாட்கள் வரிசையில் காத்து நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திணைக்களம், இப்போது ஒரு நாளைக்கு 1,000 கடவுச்சீட்டுக்களை மட்டுமே வழங்குகிறது.

ஒரு நாள் சேவை

மேலும் அதன் ஒரு நாள் சேவையின் மூலம் 700 கடவுச்சீட்டுக்களை வழங்குகிறது.

இதற்கிடையில், M/s Thales DIS Finland Oy மற்றும் அதன் இலங்கை முகவரான Just In Time ஆகியவற்றின் கூட்டமைப்பிலிருந்து 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை வாங்குவதற்கான அமைச்சரவையின் முடிவை இடைநிறுத்தி, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் முதலாம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version