Home இலங்கை அரசியல் சஜித்தின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரிக்கை

சஜித்தின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரிக்கை

0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ராப் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற தாக்குதல் நடத்தப்படக் கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

சஜித்தின் பாதுகாப்பு

இதற்கமைய சஜித்தின் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

மேலும், சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பிற்கு அரசாங்கமே பொறுப்பு என எரான் விக்ரமரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு,  அரசாங்கம் சஜித்தின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார். 

Source: https://tamilwin.com/article/strengthen-opposition-leaders-security-sjb-1720959299

NO COMMENTS

Exit mobile version