Home இலங்கை குற்றம் கொழும்பில் சிறுமியை கடத்திய இளைஞனுக்கு நேர்ந்த கதி

கொழும்பில் சிறுமியை கடத்திய இளைஞனுக்கு நேர்ந்த கதி

0

கொழும்பின் புறநகர் பகுதியில் 15 வயது சிறுமியை அவரது பெற்றோரின் காவலில் இருந்து கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞர் ஒருவர் கொஸ்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர் வென்னப்புவ, நைனமடம, வெல்லமங்கராய பகுதியை சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுனுவில, கிரிமதியனவத்தையில் வசிக்கும் பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி கடத்தல்

கடந்த 14 ஆம் திகதி மதியம் தனது மகள் வீட்டிலிருந்து காணாமல் போனதாகவும், மேலும் விசாரணையில், மினுவாங்கொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேக நபருடன் இருப்பதாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும் சிறுமியின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் தனது கணவருடன் அங்கு சென்று தனது மகளையும் சந்தேக நபரையும் அழைத்து வந்ததாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபருடன் தனக்கு காதல் உறவு இருந்ததாகவும், தனது காதலனின் வேண்டுகோளின் பேரில் தான் அவருடன் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மருத்துவ அதிகாரி

தன்னை அழைத்துச் சென்ற காதலன் மூன்று நாட்களாக குடும்ப உறவில் ஈடுபட்டதாக சிறுமி பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தாயாரின் பாதுகாப்பின் கீழ் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version