Home இலங்கை அரசியல் சுயாட்சி இன்றிய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டால் துரோகி என முத்திரை குத்தப்படுவீர்கள்: சுமந்திரன் ஆதங்கம்

சுயாட்சி இன்றிய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டால் துரோகி என முத்திரை குத்தப்படுவீர்கள்: சுமந்திரன் ஆதங்கம்

0

எந்த ஒரு தமிழ் அரசியல் பிரதிநிதியும் இன்றைய காலத்தில் சுயாட்சி இன்றிய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டால் அவரை துரோகி என முத்திரை குத்தி ஒதுக்கிவிடுவார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவுத்தின நிகழ்வில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

மேலும், ”இப்போது நாங்கள் தனி நாடு கோரவில்லை என கூறுகின்றோம். சுயாட்சி எமது இலக்கு என சொல்கின்றோம். தந்தை செல்வாவின் வழி நடக்கின்றோம் என கூறுகின்றோம்.

இவ்வாறு கூறுபவர்கள் தந்தை செல்வாவின் வாழ்க்கையையும் அரசியல் அணுகுமுறையையும் ஒருமுறை படித்து பார்க்க வேண்டும்.

சிலர் அரசியல் வரலாறுகளை சுயநலத்துக்காக அவற்றை ஒதுக்கி தேவையானவற்றைக்கொண்டு அரசியல் செய்வது நல்ல விடயம் அல்ல.

தந்தை செல்வா எவ்வாறு சுயநலமின்றி விடுதலையை நோக்கி நகர்ந்தாரோ அவ்வாறே எமது அரசியல் போக்கும் அமைய வேண்டும்.” என்றார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

 

கிளிநொச்சியில் இராணுவ புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலால் பெண்கள் உட்பட மூவர் அதிரடிக் கைது

தமிழர் பொது வேட்பாளர் என்பது குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது: சட்டத்தரணி சுவிஸ்திகா தெரிவிப்பு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version