Home முக்கியச் செய்திகள் யாழ்ப்பாணம் திரும்பிய சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா – வரவேற்க திரண்ட மக்கள்

யாழ்ப்பாணம் திரும்பிய சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா – வரவேற்க திரண்ட மக்கள்

0

இந்தியாவின் (India) தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும்
நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 பாடல் போட்டியில் யாழ்ப்பாணம்
– கொக்குவில் பகுதியை சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா என்ற சிறுமி பாடி
வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது பாடல் சுற்றானது நிறைவடைந்த நிலையில் மீண்டும் இன்றையதினம் (22.02.2025) பலாலி விமான நிலையம்
ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

கௌரவிப்பு நிகழ்வு 

இதன்போது ஒன்று கூடிய மக்கள் அவருக்கு பொன்னாடை போர்த்து கௌரவித்து வரவேற்பு
செய்தனர்.

பின்னர் வாகனங்கள் அணிவகுத்து வர சொந்த ஊருக்கு காரில் அழைத்து
வரப்பட்டார்.

அதன்பின்னர் அவரது ஊரான கொக்குவில் பகுதியில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றும்
முன்னெடுக்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version