அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்த மாபெரும் பேரணி நுகேகொடை ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று(21) நடைபெற்றது.
பெருமளவான மக்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட மேலும் பல எதிர்கட்சிகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தனர்.
இதில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது எனினும் அவர் கலந்து கொள்ளவில்லை.
இதன்போது நாமலின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆதரவாளர்கள் அளவுக்கு மீறிய போதையில் இருக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
