Home இலங்கை அரசியல் நாடாளுமன்றத் தேர்தலில் விலகிய தமிழ் மக்கள் பொதுச் சபை

நாடாளுமன்றத் தேர்தலில் விலகிய தமிழ் மக்கள் பொதுச் சபை

0

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை நேரடியாக ஈடுபடாது என தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானம் திருகோணமலை உப்பு வெளி, ஆயர் இல்ல மண்டபத்தில் இன்று (29) இடம்பெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ்த் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கி, பொது வேட்பாளரை களம் இறக்கின.

எனினும்,  அதுபோல நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாக தேர்தலில் ஈடுபடுவதில்லை என்று பொதுச்சபை முடிவு எடுத்துள்ளது.

மேலும், பொதுச் சின்னம் ஆகிய சங்கு சின்னத்தை இந்த தேர்தலில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுக் கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகளிடம் கேட்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version