Home விளையாட்டு இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் வியாஸ்காந்த் – சிராஸ்

இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் வியாஸ்காந்த் – சிராஸ்

0

இந்தியா ‘ஏ’ அணி, மற்றும் இலங்கை  ‘ஏ’ அணிகளுக்கு இடையே இன்று ரங்கிரி தம்புள்ள சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் சர்வதேச ஒருநாள் தொடரின் இன்றைய போட்டியில் இரு தமிழ் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கன்னட்டுள்ளது.

அண்மைக்காலமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற தமிழ் பேசுகின்ற வீரர்களான வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சிராஸ் மற்றும் சுழல்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகிய இருவரும் முதன்முறையாக இடம்பிடித்துள்ளனர்.

2026 முத்தரப்புத் தொடரில் இந்தியா ‘ஏ’ அணி, இலங்கை ‘ஏ’ மற்றும் ஆப்கானிஸ்தான்  ‘ஏ’ அணிகள் பங்குபற்றுகின்றன.

வைபவ் சூர்யவன்ஷி

இதன்படி இன்றைய ஆட்டத்தில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.

லீக் சுற்றுக்குப் பிறகு முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இதன்படி இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா ‘ஏ’ முதலில் துடுப்படுத்தாட்டத்தை தெரிவுசெய்தது.

இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, மொஹமட் சிராஸின் பந்துவீச்சில் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தற்போது வரை இந்திய அணி இரண்டு விக்கட் இழப்புக்கு 38 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அணி விபரம் 

இலங்கை அணி – நிரோஷன் டிக்வெல்ல ,
அவிஷ்க பெர்னாண்டோ,
நுவனிது பெர்னாண்டோ,
சதீர சமரவிக்ரம,
சஹான் ஆராச்சிகே ,
சாமிக்க கருணாரத்ன,
ரவிந்து பெர்னாண்டோ,
வனுஜா சஹான்,
விஜயகாந்த் வியாஸ்காந்த்,
முகமது ஷிராஸ்,
கருகா சங்கேத்

இந்திய அணி  – பிரப்சிம்ரன் சிங்  வைபவ் சூரியவன்ஷி

பிரியன்ஸ் ஆர்யா

ருதுராஜ் கெய்க்வாட்

திலக் வர்மா

ஆயுஷ் படோனி

சூர்யன்ஷ் ஷெட்ஜ்

அர்ஷத் கான்

விப்ராஜ் நிகம்

அனுகுல் ராய்

அன்ஷுல் கம்போஜ்

2026–2027 போட்டிப் பருவகாலத்திற்காக இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள் 46 பேரை தேசிய விளையாட்டு வீரர் ஒப்பந்தங்களுக்காக (National Player Contracts) தேர்ந்தெடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அண்மையில் அறிவித்தது.

இதில் முதல் தடவையாக அண்மைக்காலமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற தமிழ் பேசுகின்ற வீரர்களான வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சிராஸ் மற்றும் சுழல்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகிய இருவரும் முதன்முறையாக இடம்பிடித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

தேசிய வீரர் ஒப்பந்தம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இந்த ஒப்பந்தக் காலப்பகுதியானது 2026 ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2027 மார்ச் 31 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீரர்களின் திறமை, நிலையான ஆட்டம், உடற்தகுதி, எதிர்கால ஆற்றல் மற்றும் தேசிய அணிகளின் மூலோபாயத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, அவர்கள் A1, A2, B1, B2, C, மற்றும் மத்திய ஒப்பந்தங்கள் (Central Contracts) ஆகிய பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

‘இந்த ஒப்பந்தங்களை வழங்குவதன் நோக்கம், தெரிவு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டின் உச்சக்கட்ட மட்டத்தில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்குத் தேவையான ஆதரவு, கட்டமைப்பு மற்றும் வளங்களை வழங்குவதாகும்.

அத்துடன் இதன்

இம்முறை தேசிய வீரர் ஒப்பந்தங்களில் வியாஸ்காந்த், சிராஸைத் தவிர்த்து கமில் மிஷார, லசித் குரூஸ்புள்ளே, இசித விஜேசுந்தர, வனுஜ சஹன், திலும் சுதீர மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகிய வீரர்கள் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

https://www.youtube.com/embed/ielfje_2C10

Source: https://ibctamil.com/article/tamil-players-in-the-odi-match-against-india-1780982703

NO COMMENTS

Exit mobile version