Home உலகம் பிரித்தானியாவில் மோசமான செயலில் ஈடுபட்ட தமிழ் ஆசிரியருக்கு சிறை

பிரித்தானியாவில் மோசமான செயலில் ஈடுபட்ட தமிழ் ஆசிரியருக்கு சிறை

0

பிரித்தானியாவில் (United Kingdom) தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறுவர்களை உடல் ரீதியாக தாவறான முறைக்குட்படுத்தினார் என்ற 08 குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா – குறொய்டன் பகுதியை சேர்ந்த 51 வயதான ஜேக்கப் தனுகரன் எனும் நபருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனை

2000 ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சிறுவர்களை உடல் ரீதியாக தாவறானமுறைக்குட்படுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்

இதேவேளை இந்தியப் பெருங்கடலிலுள்ள பிரித்தானிய – அமெரிக்க (United States) இராணுவத் தீவான டியாகோ கார்சியா முகாமில், பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை (Sri Lanka) தமிழர்களை தற்காலிகமாக ரொமேனியாவுக்கு அனுப்ப பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதங்களுக்குப் பின்னர், அவர்கள் பிரித்தானியாவுக்கு மாற்றப்படலாம் அதேநேரம் குழுவில் உள்ள மற்றவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு நிதி சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில், குறித்த இலங்கை தமிழர்கள், கனடாவை (Canada) நோக்கிய பயணித்த படகு, விபத்தில் சிக்கிய பின்னர், டியாகோ கார்சியாவில் தஞ்சமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version