Home இலங்கை குற்றம் சட்டவிரோதமாக பனை மரங்களை கடத்தி சென்றவர் வட்டுக்கோட்டையில் கைது

சட்டவிரோதமாக பனை மரங்களை கடத்தி சென்றவர் வட்டுக்கோட்டையில் கைது

0

யாழில் சட்டவிரோதமாக பனை மரங்களை கடத்திச் சென்ற ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த கைது நடவடிக்கை நேற்று (21.10.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர், காரைநகரில் இருந்து அளவெட்டி பகுதிக்கு பனைமரங்களை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளார்.

வாகனம் மீட்பு

இதன்போது, அவர் பொன்னாலை பகுதியில் வைத்து வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளை, இதன்போது பனைமரங்களும், அவற்றை கொண்டு
செல்வதற்கு பயன்படுத்திய வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version