Home இலங்கை அரசியல் ரணிலின் அழைப்பை ஏற்ற ஜனநாயக போராளிகள் கட்சி

ரணிலின் அழைப்பை ஏற்ற ஜனநாயக போராளிகள் கட்சி

0

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அவருடன் கலந்துரையாட உள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சி ஊடகப் பேச்சாளர் க. துளசி தெரிவித்துள்ளார்.

அதன் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளை பேச்சுக்கு அழைத்துள்ள நிலையில் தாம் கலந்து கொண்டு பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர்,

ஜனாதிபதி 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில்
கலந்துரையாடுவதற்காக அழைப்பு விடுத்துள்ளார்.

பிரச்சினை

இந்த நிலையில் பல்வேறுபட்ட
பிரச்சினைகளும் தமிழர் தரப்பாக கலந்துரையாடவேண்டி இருப்பதன் காரணமாகவும் அவர்
தற்போதைய ஜனாதிபதி என்ற ரீதியிலும் அவருடன் கலந்துரையாட நாம்
தீர்மானித்துள்ளோம்.

இதன்போது, பயங்கரவாத தடை சட்ட விடயம், அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற
விடயங்களிலும் நாம் கரிசனை காட்டுவோம் என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version