Home முக்கியச் செய்திகள் சென்னையில் இரவுநேரம் பயங்கரம் : இரண்டு தொடருந்துகள் நேருக்குநேர் மோதல்

சென்னையில் இரவுநேரம் பயங்கரம் : இரண்டு தொடருந்துகள் நேருக்குநேர் மோதல்

0

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சரக்கு தொடருந்து மீது விரைவு தொடருந்து மோதியதில் 7 பெட்டிகள் தடம் புரண்டதுடன் இரு பெட்டிகள் தீப்பற்றின. விபத்தில் சிக்கிய பயணிகள் பலர் காயமுற்றனர். உயிரிழப்புகள் பற்றி உடனடியாக எதுவும் தெரியவில்லை.

இன்றிரவு 9.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சரக்கு தொடருந்து மீது மோதி விபத்து

கர்நாடகம் மாநிலம் மைசூருரிலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு சென்னை பெரம்பூர் வழியே தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் தொடருந்தே விபத்தில் சிக்கியது.

வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பெரம்பூரிலிருந்து புறப்பட்ட இந்த தொடருந்து பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை தொடருந்து நிலையம் அருகே சரக்கு தொடருந்து மீது மோதியது.

பலர் சிக்கி காயம் அடைந்தனர்

இந்த விபத்தில் 7 குளிர்சாதனப் பெட்டிகள் தடம் புரண்டதில் பலர் சிக்கி காயம் அடைந்தனர். இதில் முன்னே இருந்த சரக்கு தொடருந்தின் இரு பெட்டிகள் தீப்பற்றின.

இந்த விபத்தில் பலர் சிக்கி காயம் அடைந்த நிலையில் அம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version