இலங்கை தமிழரசுக் கட்சி 75 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் ஒரு பலமான கட்சி என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் கூறினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், சுமந்திரன் மற்றும் சிறிதரனுக்கு இடையில் மன கசப்புகள் இருந்தால் அதை அவர்கள் இருவரும் தனியாக பேசி தீர்க்க வேண்டும் இதை ஒரு கட்சியின் பிரச்சினையாக நான் பார்க்கவில்லை.
கட்சி என்பது அவர்கள் இருவரும் இல்லை.
எனவே அவர்கள் இருவரும் தமது பிரச்சினைகளை பேசி தீர்க்க வேண்டும் என கூறினார்.
Source: https://tamilwin.com/article/tna-tamil-party-issues-shanakkiyan-speech-1714706986
