Home முக்கியச் செய்திகள் அதிரும் தென்னிலங்கை : சற்று முன்னர் நடந்த துப்பாக்கிசூடு

அதிரும் தென்னிலங்கை : சற்று முன்னர் நடந்த துப்பாக்கிசூடு

0

காலி மீட்டியாகொட பகுதியில் இன்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மீட்டியகொடவின் தம்பஹிட்டிய பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் பலபிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மீட்டியாகொட காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மீட்டியாகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version