Home முக்கியச் செய்திகள் தமிழர் பகுதியில் சாரதி தூங்கியதால் ஏற்பட்ட விபத்து

தமிழர் பகுதியில் சாரதி தூங்கியதால் ஏற்பட்ட விபத்து

0

திருகோணமலையில் (Trincomalee) இருந்து மட்டக்களப்பு (Batticaloa) நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து மான்கேணி காட்டுப் பகுதியில் நேற்று(25) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் தெரியவருகையில், சாரதி தூங்கியமையால் கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

இந்த விபத்தில் சாரதி உட்பட காரில் பயணித்த அனைவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைகாலமாக அதிகளவான விபத்துக்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version