Home முக்கியச் செய்திகள் யாழில் வீடொன்றினுள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது

யாழில் வீடொன்றினுள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது

0

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அச்சுவேலி – பத்தமேனி பகுதியில் உள்ள வீட்டிலேயே குறித்த சம்பவம் நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலின் போது வீட்டின் கண்ணாடிகள் மற்றும் ஹயஸ் ரக வாகனம் என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயும்,மகளும் நடத்திவந்த விபசார விடுதி முற்றுகை!

காவல்துறையினர் சந்தேகம்

இதேவேளை வன்முறையில் காயமடைந்த 70 வயதான முதியவர் சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொழில் போட்டியே வன்முறைக்கு காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2025 இல் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

NO COMMENTS

Exit mobile version