மீரிகம-பஸ்யால பிரதான வீதியில் மல்லஹாவ பகுதியில் நடந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் பலத்த காயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 35 வயதுடைய அமிதிரிகல மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பல்லேவெல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
