Home உலகம் ஸ்பெயின் தலைநகரில் உக்ரைன் முன்னாள் அதிகாரி பட்டப்பகலில் சுட்டு படுகொலை

ஸ்பெயின் தலைநகரில் உக்ரைன் முன்னாள் அதிகாரி பட்டப்பகலில் சுட்டு படுகொலை

0

ஸ்பெயின்(spain) தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு அமெரிக்கப் பாடசாலைக்கு வெளியே முன்னாள் உக்ரைன்(ukraine) அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

51 வயதான ஆண்ட்ரி போர்ட்னோவ்(Andriy Portnov), தனது பிள்ளைகளை நகரத்தின் போசுவேலோ டி அலார்கான் பகுதியில் உள்ள பாடசாலையில் விட்டுச் சென்றவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

அடையாளம் தெரியாத தாக்குதல்தாரி

அடையாளம் தெரியாத ஒரு தாக்குதல்தாரி அவர் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, அருகிலுள்ள பொது பூங்காவில் உள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்றதாக சாட்சிகள் தெரிவித்தன.

பல மாத போராட்டங்களுக்குப் பிறகு உக்ரைனில் 2014 இல் பதவி நீக்கம் செய்யப்பட்ட ரஷ்ய ஆதரவு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் நிர்வாகத்தில் போர்ட்னோவ் ஒரு எம்.பி.யாகவும் துணைத் தலைவராகவும் இருந்தார்.

அமெரிக்க திறைசேரியால் தடைசெய்யப்பட்டவர்

புரட்சிக்குப் பிறகு அவர் உக்ரைனை விட்டு வெளியேறினார், வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு 2019 இல் திரும்பினார்.

பின்னர் அவர் மீண்டும் உக்ரைனை விட்டு வெளியேறினார், மேலும் 2021 இல் அமெரிக்க திறைசேரியால் தடைசெய்யப்பட்டவராக அறிவிக்கப்பட்டார்.

புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 09:15 மணிக்கு (GMT 07:15) நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை

சாட்சிகளின் கூற்றுப்படி, நீல நிற டிராக்சூட் அணிந்த ஒரு மெல்லிய மனிதரான துப்பாக்கிதாரியைத் தேடும் பணியில் காவல்துறை ட்ரோன்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் ஈடுபட்டன. துப்பாக்கிதாரிக்கு மோட்டார் சைக்கிளில் குறைந்தது ஒரு கூட்டாளி இருந்திருக்கலாம் என்று ஸ்பானிஷ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version