Home உலகம் ட்ரம்ப்பின் கோல்ட் கார்டு விசா : ஒரே நாளில் 1000 அட்டை விற்பனை

ட்ரம்ப்பின் கோல்ட் கார்டு விசா : ஒரே நாளில் 1000 அட்டை விற்பனை

0

ட்ரம்ப்பின் (Donald Trump) புதிய கோல்ட்  கார்டு விசா (gold card visa) ஒரே நாளில் 5 பில்லியன் டொலருக்கு விற்கப்பட்டதாக அமெரிக்க அரசு (United States Government) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற கோல்ட் கார்டு விசா திட்டத்தை ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த பெப்ரவரி மாதம் அறிவித்தார்.

இந்த விசா 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ.43 கோடி) வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

கோல்ட் கார்டு விசா

இந்த கோல்ட் கார்டு விசாவில், கிரீன் கார்டு விசாவைவிட அதிக சலுகைகள் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளதாவது, “ட்ரம்ப் அறிவித்த கோல்ட் கார்டு விசா திட்டத்தின் கீழ் ஒரேநாளில் ஆயிரம் கோல்ட் கார்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

மேலும் கோல்ட் கார்டு வாங்குவதற்காக பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.

நிரந்தர குடியுரிமை

இதன் மூலம் கிரீன் கார்டு வைத்திருப்பது போன்று கோல்ட் கார்டும் பயனுள்ளதாக இருக்கும். இது அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றதற்கு சமம். இத்திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இந்த திட்டம் 2 வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். இதற்கான மென்பொருளை எலான் மஸ்க் உருவாக்கி வருகிறார்.

5 மில்லியன்டொலர்களை செலுத்துவதன் மூலம் அமெரிக்காவில் காலவரையின்றி, அவர்கள் விரும்பும் எந்த நேரத்திலும் இருக்க உரிமை உண்டு. அவர்களது பின்புலம் சரிபார்க்கப்படுகிறது.

அவர்கள் தீயவர்களாகவோ அல்லது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாகவோ இருந்தால் அமெரிக்கா எப்போதும் அதை ரத்து செய்யலாம்.” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version