Home இலங்கை அரசியல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளில் நிகழவுள்ள மாற்றம்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளில் நிகழவுள்ள மாற்றம்!

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மரப்பெட்டிகளுக்கு பதிலாக அட்டை பெட்டிகளால் செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை தேர்தல் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் செலவு

இதன்படி, வாக்காளர்களின் எண்ணிக்கையை பொறுத்து வாக்குப்பெட்டிகள் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவுகளில் தயாரிக்கப்பட்டு வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருட தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் 8 பில்லியன் ரூபா மட்டுமே செலவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

Source: https://tamilwin.com/article/use-cardboard-boxes-in-presidential-elections-1724511866

NO COMMENTS

Exit mobile version