Home ஏனையவை ஆன்மீகம் நாளை இடம்பெறவுள்ள வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா

நாளை இடம்பெறவுள்ள வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா

0

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். (Jaffna) வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய
வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நாளை காலை 9 மணிக்கு
நடைபெறவுள்ளது.

காலை 8 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று தொடர்ந்து சுவாமி தேர் உலா இடம்பெறவுள்ளது.

அதேவேளை, சமுத்திர தீர்த்தத் திருவிழா நாளை மறுதினம் மாலை 5 மணிக்கு
கற்கோவளம் வங்கக் கடலில் இடம்பெறும்.

போக்குவரத்துச் சேவைகள்

இதற்கான வசந்த மண்டபப் பூஜை மாலை 4
மணிக்கு நடைபெற்று தீர்த்தமாடுவதற்குச் சுவாமி 5 மணிக்கு வங்கக்கடல் நோக்கி கொண்டு செல்லப்படும்.

மேலும், மறுநாள் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆலய வளாகத்திலுள்ள கேணியில் பட்டுத்
தீர்த்தம் நடைபெற்று இறுதியாக அன்றைய தினம் மாலை 5 மணிக்குக் கொடியிறக்கம் இடம்பெறுவதுடன்
மஹோற்சவம் நிறைவுறும்.

இந்நிலையில் தேர், தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு பக்தர்களின் வசதி கருதி விசேட
போக்குவரத்துச் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் ஆலய சுற்றாடலிலுள்ள அன்னதான
மடங்களில் அன்னதான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 

NO COMMENTS

Exit mobile version